சென்னையில் படுவேகத்தில் பரவும் கரோனா: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
சென்னையில் கரோனா பாதிப்பு
சென்னையில் கரோனா பாதிப்பு

சென்னை கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 4,19,261 ஆகவும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 42,579 ஆகவும்  அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை கரோனாவுக்கு 5,546 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பான 4,19,261 பேரில் 3,71,136 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்று(மே 13) மட்டும் 30,954 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com