காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.60 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வா் கோயில் தெருவில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரணத் தொகை தலா ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் நடைபெற்றது.
இதில், அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 653 நியாய விலைக் கடைகள் மூலம் காலை 8 மணியிலிருந்து 12 மணி வரை உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரண உதவித் தொகை வழங்கப்படும். இதன் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 4ஆயிரம் வீதம் ரூ. 144.10 கோடி வழங்க திட்டமிடப்பட்டது. இதில், முதல் தவணையாக மட்டும் 3,60,252 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 72.05 கோடி வழங்கிட அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
விழாவில், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம், எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் பா.லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


