காஞ்சிபுரத்தில் கரோனா நிதி: அமைச்சா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.60 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தாா்.
காஞ்சிபுரத்தில் கரோனா நிதி: அமைச்சா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.60 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வா் கோயில் தெருவில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரணத் தொகை தலா ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் நடைபெற்றது.

இதில், அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 653 நியாய விலைக் கடைகள் மூலம் காலை 8 மணியிலிருந்து 12 மணி வரை உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரண உதவித் தொகை வழங்கப்படும். இதன் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 4ஆயிரம் வீதம் ரூ. 144.10 கோடி வழங்க திட்டமிடப்பட்டது. இதில், முதல் தவணையாக மட்டும் 3,60,252 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 72.05 கோடி வழங்கிட அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விழாவில், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம், எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் பா.லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com