வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதிய அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரணம்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் புதிய அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :19 மே 2021, 10:28 am

DIN

தமிழகத்தில் புதிய அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 2,14,950 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்க ரூ.42.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 மாதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 2,14,950 புதிய அரிசி அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர்களுக்கும் முதல் தவணையாக ரூ. 2,000 இம்மாதமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.