சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார்.
உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் அவா் வீடு திரும்புவார் எனவும் தேமுதிக தரப்பில் விளக்கமளிக்கபட்டிருந்தது.
இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.