ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வைகை அணை நீர்வரத்து அதிகரிப்பு : முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டம், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News image
வைகை அணை
Updated On :26 மே 2021, 2:51 am

DIN


தேனி மாவட்டம், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 900  கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வைகை அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை 645 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு 66 அடியாக உயர்ந்ததால் வைகையாற்றின் கரையோரங்களில் வசிக்கும் பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 68.50 அடியாக உயர்ந்தால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியாக உயர்ந்த பின் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் உபரிநீர் அணைத்தும் வைகையாற்றில் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.