ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா: நாகையில் வீடு வீடாகச் சென்று கண்காணிக்க அமைச்சர் நடவடிக்கை

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றைத் தடுக்க வீடு வீடாக சென்று கண்காணிக்க நடவடிக்கை: அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

News image
Updated On :27 மே 2021, 11:48 am

DIN

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த குழுக்கள் அமைத்து வீடு வீடாக சென்று சிகிச்சை அளிக்கவும், கண்காணிக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று சிகிச்சை மையத்தை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  புதன்கிழமை ஆய்வு செய்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நாகை மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தேவையான இடங்களில் கரோனா சிசிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் முதலாவது சிசிச்சை மையம் ஆயக்காரன்புலம் பள்ளி கட்டடத்தில் இன்று முதல் செயல்படுகிறது. இங்கு எந்த நேரத்திலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பர்.

தொற்றின் அறிகுறிகள், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்கி சிகிச்சை பெற்று குணமடையலாம். சத்தான உணவு, உபகரணங்கள்,மருந்துகள் வழங்கப்படும்.

தற்போது இந்த பகுதியில் நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில்  தடுப்பூசி மட்டுமே கரோனாவை எதிர்கொள்ளும் பேராயுதமாகவும்,  உயிரை காக்கும் கவசமாகவும் இருப்பதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.

பின்னர் கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையங்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.