ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சுருளி அருவியில் வெள்ளம்: நீர்பிடிப்பு பகுதிகள் தொடர் மழை எதிரொலி

தேனி மாவட்டம், சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image
சுருளி அருவி
Updated On :27 மே 2021, 4:54 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ளது சுருளி அருவி. யாஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக சுருளி மலையில் அமைந்துள்ள சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய ஓடைகளில் நீர் வரத்து ஏற்பட்டது. மேலும் சுருளிமலையின் இதர நீர் ஊற்றுகளிலும் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டது.

இதனால் வியாழக்கிழமை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே தடை உத்தரவு காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. 

இதனால் மேகமலை வன உயிரின  சரணாலயம் ஊழியர்கள் அருவியின்  வெள்ளப்பெருக்கை கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.