நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று குறையாததை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று அங்கு ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். 

News image

மு.க.ஸ்டாலின்

Updated On :28 மே 2021, 1:42 pm IST

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று குறையாததை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று அங்கு ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். 

இதற்காக நாளை மறுநாள்(மே 30) கோவைக்குச் சென்று அங்கு பல்வேறு இடங்களில் அவர் நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார். 

முன்னதாக, சென்னையைவிட கோவை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது. நேற்று கோவை மாவட்டத்தில் 4,734 பேருக்கு தொற்று உறுதியானது, 32 பேர் உயிரிழந்தனர். 

மேலும் கோவை, திருச்சி உள்ளிட்ட கரோனா பரவல் குறையாத ஆறு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியதுடன் அந்த 3 மாவட்டங்களுக்கு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து கரோனா தடுப்பு நடவடிக்களுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். 

அதன்படி கோவைக்கு கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக சித்திக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.