ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை: முதல்வர் வழங்கினார்

எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழங்கி சிறப்பித்தார். 

News image

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Updated On :1 நவம்பர் 2021, 9:12 am

DIN

நவம்பர் 1-ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கும் வகையில் எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழங்கி சிறப்பித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (1.11.2021) தலைமைச் செயலகத்தில், நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாகக் கடைப்பிடிக்கும் வகையில், எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு நேர்வாக ஒவ்வொருவருக்கும் 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.

இந்திய நாடு விடுதலை பெற்ற பின்பு, 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்டபோது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. அவ்வாறு பிரித்த போது, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள்ளனர்.

அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் வகையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக தமிழ்நாடு அரசு அனுசரிக்கும் வகையில், எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தியாகம் செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக ஒவ்வொருவருக்கும் 1 இலட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதன்படி, 110 எல்லைப் போராட்டத் தியாகிகளில், 14 பேருக்கு இன்று முதல்வர், 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார். மற்ற எல்லை போராட்டத் தியாகிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வாயிலாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.