சென்னையில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்று மீட்ட இளைஞர் மரணம்

சென்னையில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்துசென்று மீட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
சென்னையில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்று மீட்ட இளைஞர் மரணம்
Published on
Updated on
1 min read

சென்னையில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்துசென்று மீட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வியாழக்கிழமை மயங்கி கிடந்த இளைஞர் உதயா என்பவரை சென்னை டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் தூக்கிக் கொண்டு வந்து பிறகு ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். 

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயலுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டுக்கள் தெரிவித்தனர். மேலும் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டியதோடு சான்றிதழும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்துசென்று மீட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com