
வங்கக் கடலில் சனிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னையில் கரையை கடந்துள்ள நிலையில், புதிதாக அந்தமானுக்கு அருகே நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நவ.15-இல் நகர்ந்து வரும் என்றார்.