பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

நாளை(நவ.13) உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் சனிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
சென்னை வானிலை ஆய்வு மையம்
Updated On :28 ஜனவரி 2024, 4:33 am

DIN

வங்கக் கடலில் சனிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னையில் கரையை கடந்துள்ள நிலையில், புதிதாக அந்தமானுக்கு அருகே நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நவ.15-இல் நகர்ந்து வரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.