நாளை(நவ.13) உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் சனிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on
Updated on
1 min read

வங்கக் கடலில் சனிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னையில் கரையை கடந்துள்ள நிலையில், புதிதாக அந்தமானுக்கு அருகே நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நவ.15-இல் நகர்ந்து வரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com