புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புவனகிரி, சிதம்பரம் பகுதிகளை பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் - பழனிசாமி 

கடலூர் மாவட்டம், புவனகிரி, சிதம்பரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று பார்வையிட்டு பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். 

News image

புவனகிரி, சிதம்பரம் பகுதிகளை பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் - பழனிசாமி 

Updated On :16 நவம்பர் 2021, 7:45 am

DIN

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், புவனகிரி, சிதம்பரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று பார்வையிட்டு பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். 

சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  பார்வையிட்டனர். அதன்படி இன்று காலை 9 மணி அளவில் புவனகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிவாரண பொருள்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள்  கே.ஏ.பாண்டியன், அருள்மொழிதேவன், முன்னாள் எம்.எல்.ஏ,க்கள் முருகுமாறன், குமரகுரு, கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பின்னர் புவனகிரி அருகே ஏரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை அவர்கள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பூவாலை  பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெற்பயிர்களை  பார்வையிட்டனர். தொடர்ந்து சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அங்கிருந்து மயிலாடுதுறைக்கு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான  அருண்மொழிதேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

முன்னதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.