திருப்பூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: பல்லடம் அருகே 5 குழந்தைகள் உள்பட 11 பேர் மீட்பு
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை இரவு விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் வீடுகளில் மழை சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவித்த 5 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டனர்.

பல்லடம் அருகே வீடுகளில் மழை சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவித்த ஐந்து குழந்தைகள் உள்பட 11 பேரை ரப்பர் படகு மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்.











