நாட்டில் புதிதாக 11,919 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,919 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.28 சதவிகிதமாக உயர்ந்துள்ளன
நாட்டில் புதிதாக 11,919 பேருக்கு தொற்று!


புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,919 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.28 சதவிகிதமாக உயர்ந்துள்ளன என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 11,917 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,78,517-ஆக உயா்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 11,242 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,38,85,132 பேர் குணமடைந்துள்ளனர். நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,28,762-ஆக உள்ளது. இது 528 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைவான எண்ணிக்கையாகும். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.37 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 470 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,64,623 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது இறப்பு விகிதம் 1.35 சதவிகிதமாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 114,46,32,851-க்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | தொலைக்காட்சி விவாதங்களால் அதிக மாசு: காற்று மாசு தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதன்கிழமை மட்டும் 73,44,739 பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 62,82,48,841 பரிசோதனைகளும், செவ்வாய்கிழமை மட்டும் 12,32,505 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com