சென்னை அருகே காற்றழுத்த மண்டலம்: நாளை(நவ.19) அதிகாலை கரையைக் கடக்கும்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இதனால், சென்னை அருகே வடதமிழகம் - தெற்கு ஆந்திரத்திற்கு இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் அதி கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காற்றழுத்த மண்டலமானது, சென்னையில் இருந்து 340 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com