காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அதிகனமழையிலிருந்து தப்பிய சென்னை: சிக்கியது எந்த மாவட்டம் தெரியுமா?

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த சென்னையில் அந்த அளவுக்கு மழைப்பொழிவு ஏற்படவில்லை.

News image
அதிகனமழையிலிருந்து தப்பிய சென்னை: சிக்கியது எந்த மாவட்டம் தெரியுமா?
Updated On :19 நவம்பர் 2021, 11:13 am

DIN

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த சென்னையில் அந்த அளவுக்கு மழைப்பொழிவு ஏற்படவில்லை.

இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், சென்னையை போனால் போகட்டும் என்று விட்டுவிட்ட அந்த மழைமேகங்கள், விழுப்புரம் மாவட்டத்துக்கு தனது கருணை முழுதையும் கொட்டித்தீர்த்துள்ளது.

அதாவது, கடந்த 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 5 பகுதிகளில் அதிகனமழை பதிவாகியுள்ளது. அதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூர் பகுதிகளில் தலா 22 செ.மீ. மழையும், மணம்ழுண்டியில் 21 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இது மட்டுமல்ல, விழுப்புரம் மாவட்டத்தில் முகையூரில் 20 செ.மீ. மழையும் ஆனந்தபுரத்தில் 19  செ.மீ. மழையும் விழுப்புரம், செஞ்சி, மரக்காணம், வானூர் பகுதிகளிலும் கனமழை பதிவாகியுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வட தமிழகத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்  மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.

இதன் காரணமாக, இன்று, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.