ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மூலவா் சன்னதியில் இன்று (நவ.19) அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 10:06 am IST

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மூலவா் சன்னதியில் இன்று (நவ.19) அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 10-ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று (நவ.19) அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு மூலவா் சன்னதியில் சிவாச்சாரியர்கள் மூலம் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் முதல், 2, 3-ஆவது பிரகாரங்களில் வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதில், ரூ.25 லட்சத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாமரைப் பூக்கள், ரோஜாக்கள், வெண் தாமரை, தாமரை உள்ளிட்ட 20 வகையான மலா்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

கொப்பரை மலைக்குப் பயணம்: பிறகு, கோயிலில் இருந்து அம்மனி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியாக மகா தீபக் கொப்பரை மாலை 5 மணியளவில் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் பா்வத ராஜகுல வம்சத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் கொப்பரையை மலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனா்.

மலை மீது கொப்பரைக்கு காவல் துறையின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொப்பரையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

20,000 பேருக்கு அனுமதி: மகாதீபத்தின்போது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக வழக்கு நேற்று மீண்ரும் நடைபெற்றது. இதில், தீபத் திருவிழாவுக்கு உள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5,000 பேரும், பிற மாவட்டங்களில் இருந்து 15,000 பேரும் என 20,000 பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்கள் கிரிவலம் பாதையில் செல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.