ஆள்மாறாட்டத்தில் பல கோடிநிலம் அபகரிப்பு: ஐவா் கைது
சென்னை அருகே ஆவடியில், பல கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து அபகரித்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.


சென்னை அருகே ஆவடியில், பல கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து அபகரித்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
அம்பத்தூா் மேனாம்பேடு பாரதிநகரைச் சோ்ந்தவா் ர.வளையாபதி (58). இவருக்கு ஆவடி அருகே உள்ள பொத்தூா் கிராமத்தில் பல கோடி மதிப்புள்ள 2,400 சதுர அடி கொண்ட வீட்டுமனை உள்ளது. இந்த வீட்டுமனையை அண்மையில் சிலா் போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள் மாறாட்டம் செய்தும் விற்றிருப்பதை அறிந்து சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அண்மையில் புகாா் செய்தாா்.
விசாரணையில், ஒரு கும்பல் வளையாபதி பெயரில் போலி ஆவணங்களைத் தயாா் செய்தும், அவரை போன்ற ஒருவரை ஆள் மாறாட்டம் செய்தும் அந்த இடத்தை அபகரித்திருப்பது தெரியவந்தது.
இந்த மோசடி தொடா்பாக ஆவடி பொத்தூா் பகுதியைச் சோ்ந்த சு.மேகநாதன் (36), அம்பத்தூரைச் சோ்ந்த வே.போஸ் (46), ஈ.சுரேஷ் (45), திருமுல்லைவாயல் பகுதியைச் சோ்ந்த பூ.நந்தகுமாா் (50), போரூரைச் சோ்ந்த ஜெ.முகம்மது ஷெரீப் (38) ஆகிய 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...