கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் செவ்வாய்க்கிழமை பலத்த கனமழை பெய்ததால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் திண்டுக்கல் குமுளி சாலையில் உள்ள மழைநீர் வடிகால்கள் நிரம்பி மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் சேர்ந்து பிரதான சாலை மற்றும் 17வது வார்டு ராஜீவ் காந்தி நகர் பகுதிக்குள் சென்றது.
ராஜீவ்காந்தி நகரில் தாழ்வான தெருக்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் சென்றதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வயதான பெரியவர்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறும்போது, 'வடகிழக்கு பருவமழை எதிரொலியாக மழைநீர் வெள்ளம் ஏற்படும் காலங்களில், வாறுகால், வடிகால்களை தூர்வாராத காரணத்தினால் மழை வெள்ளம் தாழ்வான பகுதிகளுக்குள் சென்று வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதேபோல் கம்பம் நகர் பகுதியிலும் சுமார் 25 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK

உலகிலேயே கடுமையான தேர்வு! UPSC தேர்வில் வெற்றி பெற்றோருக்கு முதல்வர் பாராட்டு!

”ஒரு குடும்பமாக செயல்படுகிறோம்!” பியூஷ் கோயல் | ADMK | BJP
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

