விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மஹாளய அமாவாசை: சுருளி அருவி வளாகப் பகுதியில் பக்தர்கள் அனுமதி

தேனி மாவட்டம் சுருளி அருவி வளாகப் பகுதியில் மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

News image
Updated On :6 அக்டோபர் 2021, 10:53 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவி வளாகப் பகுதியில் மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாளில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்றும், நல்லாசி கிடைக்கும் என்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் வழிபாடுகள் நடத்துவார்கள்.

அதன்பேரில் புதன்கிழமையன்று மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலிலே சுருளி அருவி வளாகம் பகுதிக்கு ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். சுருளி அருவி ஆற்றின் கரையில் அமர்ந்து அங்குள்ள பூசாரிகள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அன்னதானம் வழங்கியும், பூத நாராயணசாமி கோயிலில் வழிபாடுகள் நடத்தியும் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.