உள்ளாட்சித் தேர்தல்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள் பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 11 மணி நிலவரப்படி 26 சதவிகித வாக்குகள் பதிவாகின.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் பதிவேட்டை பார்வையிடும் ஆட்சியர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் பதிவேட்டை பார்வையிடும் ஆட்சியர்.
Published on
Updated on
1 min read


ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 11 மணி நிலவரப்படி 26 சதவிகித வாக்குகள் பதிவாகின.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை உள்ளிட்ட மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெறும் இந்த முதல் கட்ட வாக்குப் பதிவில் 653 இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வருகிறது.

இதில், 2 லட்சத்து 99 ஆயிரத்து 722 வாக்காளர்கள் வாக்கு செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், மாவட்டத்தில 11 மணி நிலவரப்படி 26 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com