திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை: செந்நிறமாக மாறிய காவிரி

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வரும் நீர் செந்நிறமாக மாறி வருகிறது.

News image
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
Updated On :13 அக்டோபர் 2021, 6:20 am

DIN


பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வரும் நீர் செந்நிறமாக மாறி வருகிறது.

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஒகேனக்கலுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தினால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தானது செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி 21 ஆயிரம் கன அடியாக தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. 

தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ராசி மணல், கேரட்டி, கெம்பாக்கரை மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான வனப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கிளை ஆளான தொட்டெல்லா மற்றும் சிறு ஓடைகளில் இருந்து வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் புதன்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. 

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவார் பாணி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  

மேலும் நடைபாதை பகுதியின் மேல் பரப்பில் தண்ணீர் செல்வதால் சிறிய அருவிகள் தோன்றி காணப்படுகின்றன. காவிரி ஆற்றில் வரும் நிறுவனத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றி வரும் நீர் செந்நிறமாக மாறி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.