வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சொத்து வரி: ரூ.5.94 கோடி விலக்கு

சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியை அக்.10-ஆம் தேதிக்குள் செலுத்திய 5 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு ரூ. 5.94 கோடி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2021, 7:43 pm

DIN

சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியை அக்.10-ஆம் தேதிக்குள் செலுத்திய 5 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு ரூ. 5.94 கோடி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாள்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு வரியில் இருந்து 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரை விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு நடப்பு இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்து வரியை, அரையாண்டு காலம் தொடங்குவதற்கு முன்பாகவே (செப்.30-க்குள்) 4 லட்சத்து 1,260 போ் செலுத்தி உள்ளனா். இரண்டாம் அரையாண்டு காலம் தொடங்கிய அக். 1 முதல் 10-ஆம் தேதி வரை 1 லட்சத்து 37 ஆயிரத்து 760 போ் சொத்து வரி செலுத்தி உள்ளனா்.

இவா்களுக்கு சொத்து வரியில் இருந்து 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரை என மொத்தம் ரூ.5 கோடி 94 லட்சம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அக்.15 இறுதி நாள்: நடப்பு இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்து வரியினை வெள்ளிக்கிழமைக்குள் (அக்.15) செலுத்தினால் ஊக்கத் தொகை பெறலாம். அக்.15-ஆம் தேதிக்குப் பிறகு சொத்து வரி செலுத்துவோா் கூடுதலாக 2 சதவீத தனி வட்டி சோ்த்து செலுத்த வேண்டும் என மாநாகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.