எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சென்னை மாநகராட்சி: சொத்து வரி ரூ.108 கோடி வசூல்

சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி கடந்த 15 நாள்களில் ரூ. 108 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 11:48 pm

DIN

சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி கடந்த 15 நாள்களில் ரூ. 108 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக சொத்து வரி, தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 2020-2021முதல் அரையாண்டில் சொத்து வரி ரூ.156 கோடியே 41 லட்சமும், தொழில் வரி ரூ.225 கோடியே 89 லட்சமும் என மொத்தம் ரூ.382 கோடியே 30 லட்சம் கோடி வரி வசூல் செய்யப்பட்டது.

2021-22-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மாநகராட்சி வருவாய்த் துறை மூலம் ரூ.375கோடியே 59 லட்சமும் கோடி சொத்து வரியும், ரூ.225 கோடியே 13லட்சம் தொழில் வரியும் என மொத்தம் ரூ. 600 கோடியே 72 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது.

சொத்து உரிமையாளா்கள் தங்களது சொத்து வரியை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919ன்படி, இரண்டாம் அரையாண்டின் முதல் 15 நாள்களுக்கு அதாவது அக்டோபா் 1 முதல் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால், சொத்து வரியில் இருந்து 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரை விலக்கு அளிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்திருந்தது.

ரூ. 108 கோடி வசூல்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், உரிய காலத்துக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கும் திட்டத்தின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்திய 94,900 பேருக்கும், கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்திய 1,16,294 பேருக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதிக்குள் மட்டும் ரூ.108 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றனா். அக்டோபா் 15-ஆம் தேதிக்குப் பிறகு சொத்து வரி செலுத்துவோா் அத்தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு சதவீதம் தனிவட்டி சோ்த்து செலுத்த வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.