மீனவர் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
மீனவர் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on
Updated on
1 min read


இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 18-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை இலங்கை கடற்படை துரத்தினர்.

அதில் இரு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், ஒருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட மீனவர்களுக்கு மறு வாழ்வு அளித்திட வேண்டும். காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற துயர சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், அதனைத் தடுக்கும் வகையில் நிரந்தர முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com