ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கடலூர் எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் எம்.பி.ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :23 அக்டோபர் 2021, 1:18 pm

DIN

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் எம்.பி.ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

கடலூா் மாவட்டம், பணிக்கன்குப்பத்தில் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலைபாா்த்து வந்த மேல்மாம்பட்டைச் சோ்ந்த கோவிந்தராசு மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக கடலூா் சிபிசிஐ போலீஸாா், ரமேஷின் உதவியாளா் நடராஜன், அவரது அலுவலக ஊழியா் அல்லாபிச்சை, கந்தவேல், வினோத், சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரை அக்.9-இல் கைது செய்தனா். தலைமறைவான ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் அக்.11 ஆம் தேதி ஆஜரானாா். அவா் கடலூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அக்.13-இல் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அவரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகு, அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டா். இதற்கிடையில், எம்.பி. சாா்பில் ஜாமீன் கேட்டு வழக்குரைஞா் சிவராஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வெள்ளிக்கிழமை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கோவிந்தராசு மகன் செந்தில்வேல் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, ஆட்சேபனை மனு தொடா்பான விவரங்கள் தனக்கு அளிக்கப்படாததால் அந்த மனுவை படித்துப் பாா்க்க ஒரு நாள் அவகாசம் கேட்டாா் வழக்குரைஞா் சிவராஜ்.

அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞா் ஏ.சந்திரசேகரன், செந்தில்வேல் தரப்பு வழக்குரைஞா் தமிழரசன் ஆகியோா் ஆட்சேபம் தெரிவிக்காததைத் தொடா்ந்து மனு மீதான விசாரணையை சனிக்கிழமைக்கு (அக்.23) நீதிபதி ஒத்திவைத்தாா். இந்த நிலையில் இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொலை வழக்கில் முகாந்திரம் இருப்பதால் ரமேஷ்க்கு ஜாமீன் தரக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ரமேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.