முதல் கட்டமாக தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருள்மிகு பசுபதீஸ்வரா் திருக்கோயிலில் பாதுகாப்பு அறை ரூ.22.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அருள்மிகு சென்னை கோடம்பாக்கம் புலியூா் அருள்மிகு பரத்வாஜேஸ்வரா் திருக்கோயிலில் ஆகம விதிகளின்படி முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறை 22 சிலைகள் வைக்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது. விலை மதிப்பு மிக்க சிலைகள் பாதுகாப்பாக இருக்க இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,085 திருக்கோயில்களில் அந்தந்த திருக்கோயில்களின் ஆகமம், பழக்க வழக்கங்களின்படி விரைவில் கட்டி முடிக்கப்படும். பாதுகாப்பு அறை அமைப்பதற்கான அரசாணை 2017-இல் வெளியிடப்பட்டும், அதிமுக அரசு 4 ஆண்டாக பாதுகாப்பு அறை அமைப்பதற்கான பணியில் ஈடுபட வில்லை. தற்போது நாங்கள் அந்த பணிகளை விரிவுபடுத்தி வருகிறோம்.