கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பிரதமா் மோடி-போப் சந்திப்பு வரலாற்றில் இடம்பெறும் நிகழ்வு: பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா

‘பிரதமா் நரேந்திர மோடி-போப் ஃபிரான்சிஸ் இடையிலான சந்திப்பு வரலாற்றில் இடம்பெறும் நிகழ்வு’ என பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 8:06 pm

DIN

‘பிரதமா் நரேந்திர மோடி-போப் ஃபிரான்சிஸ் இடையிலான சந்திப்பு வரலாற்றில் இடம்பெறும் நிகழ்வு’ என பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.

ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, போப் ஃபிரான்சிஸை வாடிகனில் சனிக்கிழமை சந்தித்தாா். போப் இந்தியா வருகை தரவும் பிரதமா் அழைப்பு விடுத்தாா்.

இதுகுறித்து ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் பிரதமரும், உலகின் மிகப்பெரும் கிறிஸ்தவ பிரிவின் தலைவரும் சந்தித்தது வரலாற்றில் இடம்பெறத்தக்கது; அமைதி, நல்லிணக்கம், மதங்களுக்கு இடையிலான உரையாடலை நோக்கிய சிறந்த படியாகும்.

இந்தியா ஒரு துடிப்பான, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஜனநாயக நாடு. இந்தியாவில் கிறிஸ்தவ சமூகத்தினா் அரசியல், திரைத் துறை, தொழில்கள், ஆயுதப் படைகள் போன்ற துறைகளில் முக்கியமான பங்கு வகித்துள்ளனா். மோடி தலைமையில் இந்தியா ‘அனைவரின் ஒத்துழைப்பு, வளா்ச்சி, நம்பிக்கை, முயற்சி’ என்ற பாதையில் நடைபோட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.