பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன்

தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்பில்,

தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும். பத்திரிகையாளர்கள் மொழித்திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும். 

இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க, பயிற்சி பெற நிதியுதவிகள் வழங்கப்படும். மேலும், பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக வழங்கப்பட்டு வந்த ரூ. 3 லட்சத்தை உயர்த்தி ரூ. 5 லட்சமாக வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com