மகாகவி பாரதியார் 100 ஆவது நினைவு நாளையொட்டி, சனிக்கிழமை மேலநாகையில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு மண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நாட்டுபுறவியல் துறைத் தலைவர் இரா.காமராசு,மன்னார்குடி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.இயேசுதாஸ், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாட்டத் தலைவர் செ.அண்ணாதுரை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கே.பிச்சைக்கண்ணு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் யு.எஸ்.பொன்முடி, காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கிளைத் தலைவர் கே.வி.பாஸ்கர், எல்ஐசி அகில இந்திய முகவர் சங்க கிளை நிர்வாகி ராஜேந்திரன்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் பாரதி ஆர்.பூமிநாதன், மன்னார்குடி வணிகர் நலச் சங்க தலைவர் தாரகை செ.செல்வகுமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.