காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சேலம் மாவட்டத்தில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது!

சேலம் மாவட்டத்தில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

News image
சேலம் மணக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடுவதற்காக சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் பொதுமக்கள்.
Updated On :12 செப்டம்பர் 2021, 4:12 am

DIN


 
சேலம்: சேலம் மாவட்டத்தில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் கரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. இதற்காக 1235 வாக்குச்சாவடி மையங்களிலும், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 12 அரசு மருத்துவமனைகள், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை என 1356  இடங்களில் தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டும் 200 சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரோனா தடுப்பூசி போட ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் அந்தந்த மையங்களுக்கு வந்தனர். சரியாக ஏழு மணிக்கு தடுப்பூசி போட தொடங்கினர்.

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு திரளான முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.

இந்த மையங்களுக்கு சேலம் மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.

பொது மக்கள் கட்டாயம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சேலத்தில் அனைத்து பகுதிகளிலும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் சுமார் 2 லட்சம் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.