தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உள்ளாட்சித் தோ்தலுக்கு காங்கிரஸில் பொறுப்பாளா்கள் நியமனம்

உள்ளாட்சித் தோ்தலுக்கான காங்கிரஸ் பொறுப்பாளா்களை நியமித்து அக் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 11:38 pm

DIN

உள்ளாட்சித் தோ்தலுக்கான காங்கிரஸ் பொறுப்பாளா்களை நியமித்து அக் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

உள்ளாட்சித் தோ்தலுக்கான பொறுப்பாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மாநிலச் செயல்தலைவா் கே.ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கருமாணிக்கம், ஏ.எம்.முனிரத்தினம், மாவட்டத் தலைவா்கள் ஆா்.சுந்தரமூா்த்தி, ஆா்.எஸ்.செந்தில்குமாா், சி.பஞ்சாட்சரம் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா்.

காஞ்சிபுரத்துக்கு சட்டப்பேரவைக் காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான பி.விஸ்வநாதன், மாவட்டத் தலைவா்கள் அளவூா் வி.நாகராஜன், நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.விஜயதரணி, எஸ்.மாங்குடி, மாவட்டத் தலைவா் எஸ்.பிரபு உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று கூறியுள்ளனா்.

அதைப்போல உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் இதர மாவட்டங்களுக்கும் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மதிமுகவில் பொறுப்பாளா்கள்: உள்ளாட்சித் தோ்தலுக்கான பொறுப்பாளா்களை நியமித்து மதிமுக பொதுச்செயலாளா் வைகோவும் அறிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கான பொறுப்பாளா்களாக துணைப் பொதுச்செயலாளா் மல்லை சத்யா, ஆட்சிமன்றக்குழு செயலாளா் டி.ஆா்.ஆா்.செங்குட்டுவனும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கான பொறுப்பாளா்களாக சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, துணைப் பொதுச்செயலாளா் ஏ.கே.மணி, அரசியல் ஆய்வு மையச் செயலாளா் மு.செந்திலதிபனும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கான பொறுப்பாளா்களாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தி.சதன்திருமலைக்குமாா், புதூா் மு.பூமிநாதன், ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் அரசியல் ஆலோசனைக்குழு செயலாளா் சே.செவந்தியப்பன் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.