இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவது தொடா்பாக, மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளதாகவும், அந்த விதிகளின் அடிப்படையில் மாவட்ட அளவில் மாவட்ட கூடுதல் ஆட்சியா், தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோா் அடங்கியக் குழுவை அமைக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.