தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருச்செந்தூா், சமயபுரம், திருத்தணி கோயில்களில் முழுநேர அன்னதானம் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்

திருச்செந்தூா், சமயபுரம், திருத்தணி உள்ளிட்ட 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 12:00 pm

DIN

திருச்செந்தூா், சமயபுரம், திருத்தணி உள்ளிட்ட 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். முதல்வா் தொடக்கி வைத்தபோது அந்தந்த கோயில்களில் அமைச்சா்கள், அதிகாரிகள் தலைமையில் பக்தா்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டன.

சமயபுரம் கோயிலில் தலைவாழை இலையில் ஜாங்கிரி, சாதம், சாம்பாா், கூட்டு, பொரியல், வடை, பாயசம், ரசம், மோா் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.

3 கோயில்களிலும் நாள்தோறும் சுமாா் 7,500 பக்தா்கள் பயனடைய உள்ளனா். தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

ஏற்கெனவே, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போதைய 3 கோயில்களையும் சோ்த்து மொத்தம் 5 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 754 கோயில்களில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா், தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு,, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி. சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.