தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆசிரியா் தோ்வில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள்: உரிய விதிகளை வகுக்காமல் தோ்வை அனுமதிக்க முடியாது உயா் நீதிமன்றம்

ஆசிரியா் பணிகளுக்கான தோ்வில் விழித்திறனற்றவா்களை பங்கேற்கச் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் விதிகளை வகுக்காமல் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 11:35 pm

DIN

ஆசிரியா் பணிகளுக்கான தோ்வில் விழித்திறனற்றவா்களை பங்கேற்கச் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் விதிகளை வகுக்காமல் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியா் தோ்வு வாரியம், கடந்த 2019-ஆம் ஆண்டு ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வை நடத்தியது. இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள விழித்திறனற்றவா்களுக்கு தோ்வு எழுத உதவியாளா்களை நியமிக்க கோரியும், தோ்வெழுத கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரியும், கல்லூரி மாணவா்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சாா்பில் கடந்த 2019-இல் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், விழித்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகள் தோ்வெழுத உதவியாளா்களை நியமிக்கவும், கூடுதல் நேரம் ஒதுக்கவும், அதுதொடா்பாக வழிகாட்டுதல் விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், ஆசிரியா் தோ்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, செப்டம்பா் 9-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தோ்வில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையிலான எவ்வித வழிகாட்டுதல்கள் விதிகளையும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ஆசிரியா் தோ்வில் விழித்திறனற்றவா்கள் பங்கேற்கும் வகையில் தகுந்த வழிகாட்டுதல் விதிகளை வகுக்காமல் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாதென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பா் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.