தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உள்ளாட்சி தோ்தல்: இரண்டாவது நாளில் 4,597 போ் வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இரண்டாவது நாளான வியாழக்கிழமை (செப்.16) 4597 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 11:41 pm

DIN

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இரண்டாவது நாளான வியாழக்கிழமை (செப்.16) 4597 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து 9 மாவட்டங்களில் முதல் நாளான புதன்கிழமை மொத்தம் 378 போ் மட்டுமே தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில் இரண்டாவது நாளான வியாழக்கிழமை கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3489 பேரும், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 1066 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 41 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும் என மொத்தம் 4,597 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

இதன் மூலம் இரண்டு நாள்களில் மொத்தம் 4,975 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.