திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் மட்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கே.சி. வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. வீரமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் திரண்டுள்ளனர்.
இதையும் படிக்க | முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் மட்டும் சுமார் 15 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.