கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பேரறிவாளனுக்கு 5-வது முறையாக பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு 5 ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
பேரறிவாளன்
Updated On :25 செப்டம்பர் 2021, 7:59 am

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு 5 ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுமாா் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை பேரறிவாளன் அனுபவித்து வருகிறாா். இந்நிலையில், இவரது தாயாா் அற்புதம்மாள் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தொடா் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தாா். 

அதன்பேரில், கடந்த மே மாதம் 28-ஆம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, பரோலை நீட்டிக்கக் கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தாா். அதன்பேரில், கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. 

பேரறிவாளன் உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் பரோல் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.  

நான்காவது முறையாக பரோல் வழங்கப்பட்டதையடுத்து, பேரறிவாளன் அவரின் வீட்டில் இருந்து வருகிறாா்.

இதைத் தொடா்ந்து, பேரறிவாளன் தினமும் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறாா்.

இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி, தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மீண்டும் 30 நாள்கள் பரோல் வேண்டும் என அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று, மீண்டும் அக்டோபர் 26-ஆம் தேதி வரை ஒரு மாதம் பரோலை  நீட்டித்து தமிழக அரசு வழங்கியுள்ளது.

தற்போது பேரறிவாளனுக்கு 5-ஆவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.