திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதி மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் முத்து கடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மு கருணாநிதியின் படத்திற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான ஆர். காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், ஜிகே உலகப் பள்ளி இயக்குனர் வினோத் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத், நகர பொறுப்பாளர் பூங்காவனம், நகர துணைச் செயலாளர்கள் ஏஆர்எஸ் ஷங்கர், ஏர்டெல் குமார், வழக்கறிஞர் ஜெயக்குமார், விஜய் சங்கீதா மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.