கரோனாவில் சென்னை மீண்டும் முதலிடம்: கோவையை முந்தியது

சென்னையில் புதிதாக 243 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,40,300-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவில் சென்னை மீண்டும் முதலிடம்: கோவையை முந்தியது
கரோனாவில் சென்னை மீண்டும் முதலிடம்: கோவையை முந்தியது

தமிழகத்தில் மாவட்டங்களில் சென்னையில் இன்று அதிக அளவில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் புதிதாக 243 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்து வந்த கோவையை சென்னை முந்தியுள்ளது.

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 243 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,40,300-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 191 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், 2,048 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சென்னையில் புதிதாக 25,320 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 0.8-ஆக உள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 229 பேருக்கும், ஈரோட்டில் 167 பேருக்கும், செங்கல்பட்டில் 140 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com