கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற பயனாளிகளின் விவரங்கள் சேகரிப்பு

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 10:41 am

DIN

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

திமுக தேர்தல் வாக்குறுதியில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தது. தற்போது திமுக அரசு பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆன நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றுள்ள பயனாளிகளின் விவரங்களை பெறுவதற்கான சுற்றறிக்கை கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

கூட்டுறவு வங்கிகள் வருகிற 16 ஆம் தேதிக்குள் இதுகுறித்த விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பயனாளிகளின் ஆதார் எண், குடும்ப விவரங்கள் உள்ளிட்டவற்றையும் தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் அறிவிப்பு வரலாம் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.