திருக்குவளை: கருணாநிதி இல்லத்தில் முரசொலி மாறனின் பிறந்தநாள் விழா
திருக்குவளை: கருணாநிதி இல்லத்தில் முரசொலி மாறனின் பிறந்தநாள் விழா

திருக்குவளை: கருணாநிதி இல்லத்தில் முரசொலி மாறனின் பிறந்தநாள் விழா

முரசொலி மாறன் திருவுருவச் சிலைக்கு திமுக நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என். கௌதமன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் திருக்குவளையிலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி இல்லத்தில், உள்ள முரசொலி மாறன் திருவுருவச் சிலைக்கு திமுக நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என். கௌதமன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக, அங்குள்ள கருணாநிதியின் தந்தை முத்துவேலர் மற்றும் தாயார் அஞ்சுகம், மு. கருணாநிதி உள்ளிட்டோரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ப. கோவிந்தராசன், க. ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கீழையூர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், கீழ்வேளூர் (தெற்கு) கே. பழனியப்பன், தலைஞாயிறு மகா.குமார், வேதாரண்யம் (மேற்கு) சதாசிவம், நாகை (வடக்கு) ஆனந்த், வேளாங்கண்ணி பேரூர் கழக பொறுப்பாளர் சார்லஸ், திமுக நாகை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோ.பா.மலர்வண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் மு.ப. ஞானசேகரன், இராம. இளம்பரிதி, திருக்குவளை ஊராட்சி மன்றத் தலைவரும் மாவட்ட பிரதிநிதியுமான இல.பழனியப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com