மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எம். அப்துல்லா, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
2021 செப்டம்பர் 13 அன்று நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான, திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எம். அப்துல்லா, முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
புதுக்கோட்டையைச் சேர்நதவரான எம்.எம்.அப்துல்லா திமுகவின் வெளிநாடு வாழ் இந்திய நல அணியின் இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.