வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. தலைநகர் சென்னையிலும் விடாது பெய்த மழையினால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் படிப்படியாக இயல்பு நிலை மாறி வருகிறது.
சென்னையில் இன்னும் சில முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.