விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டினியால் 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனை உடற்கூராய்வு செய்தபோது பட்டினியால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதுவரை குழந்தைக்கு யாரும் உரிமை கோராத நிலையில் , சிறுவனின் பெற்றோர் யார், உணவு தராமல் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.