தமிழகத்தில் புதிதாக 610 பேருக்கு கரோனா: பிரிட்டனிலிருந்து திரும்பிய இருவருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 610 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் புதிதாக 610 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 1,01,389 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 610 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,39,806 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 682 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 4 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 36,680 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 26,95,856 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 7,270 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

  • சென்னை - 129
  • கோவை - 98
  • ஈரோடு - 53

மற்ற மாவட்டங்களில் 50-க்கும் குறைவாகவே பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com