தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை குறித்து ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் 16-வது பேரவையின் முதல் கூட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தின் நிதிநிலையை தற்போது உண்மை நிலையை மக்களுக்கு வெள்ளை அறிக்கை விளக்கும்.
தமிழகத்தின் நிதி நிலைமை கவலைக்குரியதாக இருக்கும் சூழல் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது.
மத்திய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.
மூன்றாம் அலையை சமாளிக்க நடவடிக்கை:
நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும்
திவர ஆக்ஸிஜன் வழங்க ரூ.50 கோடியும், மூன்றாவது அலை முன்னேற்பாடு நடவடிக்கைக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார்.