தேமுதிக கூட்டணியிலிருந்து விலகியதால் அதிமுகவிற்கு பாதிப்பில்லை என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, சட்டப்பேரவைத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக வெற்றி பெறும்.
அதிமுக வேட்பாளர்கள் மீதான குறைகள் சரிசெய்யப்படும். ஒரு சில இடங்களில் வேட்பாளர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் சரிசெய்யப்படும்.
அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டு புதிய தமிழகம் முன்பே சென்றுவிட்டது. தேமுதிக சென்றதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.
புதுச்சேரியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.