சீர்காழி: தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஆதீன கட்டளை மாணிக்கவாசக தம்பிரான் ஸ்வாமிகள் மூலம் திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில் திருக்கோயில் பிரசாதங்கள் இன்று (மே 6) வழங்கப்பட்டது.
அப்போது அதீனத்து சார்பில் திருவையாறு செந்தில், சிவபாலன், வைத்தீஸ்வரன்கோயில் சாமிநாதன், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.