ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தமிழகத்தில் 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு 1-8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 

News image
Updated On :1 நவம்பர் 2021, 3:37 am

DIN

தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு 1-8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டன. நிகழ் கல்வியாண்டில் 9-12 வகுப்புகளுக்கு கடந்த செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே, வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தரப்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவா்கள் 19 மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தருவதால் முதல் 15 நாள்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், அனுபவப் பகிா்வு, கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி மனமகிழ்ச்சி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். 

அதற்கு பின்னரே புத்தாக்கப் பயிற்சிக்கான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதேவேளையில் 1-8 வகுப்பு வரை முக்கியப் பாடக் கருத்துகளை உள்ளடக்கிய புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். இதனை நிறைவு செய்த பின்னா் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது தொடா்பான விரிவான வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதனை தவறாமல் பின்பற்ற வேண்டும். இது தவிர முகக் கவசம், தனி நபா் இடைவெளி, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட ஏற்கெனவே வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.